Wednesday, April 16, 2008

அவள் ...



(கவிதை)

விழிகளில் மட்டும் பேசினாள் ...
மொழியின் தேவை இன்றி ...

நிலவு முகம் கொண்டவள் ...
களவு செய்தனள் என் மனதை..

மனதை மழையாய் குளிர்வித்தாள் ..
எனதருமை காதலியாய் நிதம் எனை ...

சிலையாய் நீ என் முன் நிற்க
விலையாய் என் மனதை நான் விற்க ..

தமிழாய் உன் உதடுகள் தேன் சுரக்க ..
அமிழ்தாய் என் நெஞ்சம் அதை பருக ...

கனவினிலே நாம் வாழ்ந்தது இனி போதும் ..
நனவினிலே நீ வந்து சேர் கண்ணே !

- கோபு நடராசன்






No comments: