Tuesday, April 22, 2008

அழகாய் அவள் ....

(கவிதை)
பூக்கள் அழகாய் இருக்கின்றன ...
உன் கூந்தலில் இருப்பதனால் ...

நிலவு பிடிக்கிறது ...
உன் முகம் போல் தெரிவதனால் ...

தென்றல் குளிர்கிறது ....
உந்தன் மொழி போல் விசுவதால் ...

மயில் நடம் ஆடுகிறது...
உன் நடைதனை கண்டவுடன் ...

தேன் பலா இனிக்கிறது ...
உன் இதழ்களின் சுவை போலே ....

இருளும் வியக்கிறது ...
உன் கரு விழி தனை போலே ....

வாழ்தல் விரும்புகிறேன் ...
உந்தன் காதல் இருப்பதனால் ...

- கோபு நடராசன்

1 comment:

மதன்செந்தில் said...

உங்கள் படைப்புகளை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..


www.narumugai.com
நமக்கான ஓரிடம்