Monday, January 30, 2012

மாற்றங்கள் ...

மாற்றங்கள் ...
நமது வாழ்வில் மெருகேற்ற வேண்டும்...
துரு ஏற்ற அல்ல ...

- கோபு நடராசன்

செந்நிலா ....


--
சிகப்பாக வெண்ணிலா .....
ஓ...
என்னவள் நாணத்துடன் ....

- கோபு நடராசன்

என் பரிணாமம் .....



முதன் முதலில்
உன் பார்வையால் என்னை ..
பித்தனாக்கினாய்...
...
பின்..
உன் நட்பால் என்னை ...
மனிதனாக்கினாய்

இன்று...

உன் பிரிவால் என்னை

கவிஞனாக்கினாய்....
- கோபு நடராசன்

தலைவன்

பயம் சிறிதும் அற்றவன் ...
பழிக்கு அஞ்சுபவன் ...
உண்மையான தலைவன் ஆவான்.....

"கடவுள் ஒரு பொய் நம்பிக்கை

புத்தக கண்காட்சியில் ...Richard Dawkins எழுதிய The God delusion 'ன் மொழியாக்கம் "கடவுள் ஒரு பொய் நம்பிக்கை" - பெரியார் பிரசுரம் .. வாங்கி படித்தேன் ... நாம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் ...
எவ்வாறு வெறும் நம்பிக்கையின் மீது மட்டும் அமைந்த .. உருவாக்கப்பட்ட நமது மதங்கள் .... நம்மை முட்டாளாக ....மூட நம்பிக்கை மிக்கவர்களாக ... இந்த அறிவியல் யுகத்திலும் வைத்திருக்கிறது என்று .. தெளிவாக ... அறிவியல் பூர்வமாக விளக்கும் புத்தகம் ..... ஒருமுறை படித்து பாருங்கள்..

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ....

தித்திக்கும் செங்கரும்பாய் இனிக்கும் இத் "தை"
புத்திக்கு ஒவ்வாத தீது தனை சி"தை"
வித்தாகும் நல் எண்ணம் இனி நம் பா"தை"
எத்திக்கும் புகழ் மணக்க வாழும் தமிழர் நம் க"தை"

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ....
- கோபு நடராசன்

Tuesday, April 22, 2008

அழகாய் அவள் ....

(கவிதை)
பூக்கள் அழகாய் இருக்கின்றன ...
உன் கூந்தலில் இருப்பதனால் ...

நிலவு பிடிக்கிறது ...
உன் முகம் போல் தெரிவதனால் ...

தென்றல் குளிர்கிறது ....
உந்தன் மொழி போல் விசுவதால் ...

மயில் நடம் ஆடுகிறது...
உன் நடைதனை கண்டவுடன் ...

தேன் பலா இனிக்கிறது ...
உன் இதழ்களின் சுவை போலே ....

இருளும் வியக்கிறது ...
உன் கரு விழி தனை போலே ....

வாழ்தல் விரும்புகிறேன் ...
உந்தன் காதல் இருப்பதனால் ...

- கோபு நடராசன்

Wednesday, April 16, 2008

அவள் ...



(கவிதை)

விழிகளில் மட்டும் பேசினாள் ...
மொழியின் தேவை இன்றி ...

நிலவு முகம் கொண்டவள் ...
களவு செய்தனள் என் மனதை..

மனதை மழையாய் குளிர்வித்தாள் ..
எனதருமை காதலியாய் நிதம் எனை ...

சிலையாய் நீ என் முன் நிற்க
விலையாய் என் மனதை நான் விற்க ..

தமிழாய் உன் உதடுகள் தேன் சுரக்க ..
அமிழ்தாய் என் நெஞ்சம் அதை பருக ...

கனவினிலே நாம் வாழ்ந்தது இனி போதும் ..
நனவினிலே நீ வந்து சேர் கண்ணே !

- கோபு நடராசன்






சிந்திக்க ..

புதுமை பழமை எதுவானாலும் பகுத்தறிவு கொண்டு
சிந்தித்து தெளிதல் வேண்டும் ...

- கோபு நடராசன்

Tuesday, April 15, 2008

மரணம் ...

நிச்சயம் அனைவருக்கும் வருவது ...

வீரனுக்கு ஒரு முறை மட்டும் வருவது ...

சிலர் தனக்கு வராது என்று நினைப்பது ...

மதங்களின் பிரச்சாரத்திற்கு பயன் படுவது ...

காலத்தினால் மறக்கப்படுவது ...

வெகு சிலரை மட்டும் நினைவு கூற வைப்பது ...


- கோபு நடராசன்

என் காதலி....

கண்களால் கைது செய்தவள்...

காதலால் உருக செய்தவள்...

கனவினில் வந்து சென்றவள்...

காற்றினில் தொலைந்து போனவள்...


- கோபு நடராசன்

Saturday, April 12, 2008

மதம்

மதம் .....

நம் சிறு வயதிலிருந்தே நமக்கு தரப்படும் போதை ....
செய்யும் தவறுகளுக்கு தேடும் சாக்கு ....
சிலர் செழித்து வளர உதவும் அமுதசுரபி ....
பகுத்தறிவை புதைக்கும் சமாதி ...
பலரை முட்டாளாக்கி சிலர் செய்யும் ஏமாற்று ...
கற்றவரும் ஏமாறும் சித்து ...
மொத்தத்தில் நாம் அனைவரையும் ஆக்கிவிடும் பித்து ....

- கோபு நடராசன்

மாற்றம் ...

மாற்றம் வாழ்வியல் நியதியின் அடிப்படை....
மாற்றங்களோடு சேர்ந்து வாழ கற்று கொள் ...
- கோபு நடராசன்

Wednesday, April 09, 2008

வலையில் .... முதல் கவிதை...


என் காதலி .....
முதல் பார்வையில் என் உயிரை விழுங்கினாள்....
சிந்தனையை சிறையாக்கினாள்...
கனவுலகினில் கவிதை பாடினாள் ...
நினைப்பதனால் சுகம் கூட்டினாள் ...
நெஞ்சினில் நடம் ஆடினாள்
பார்வையில் நிதம் மதம் ஏற்றினாள் ...

நான் நெருங்க எனை ஏன் ஏமாற்றினாள் ...

- கோபு நடராசன்


வரவேற்பு ....

உங்களை இந்த வலை பதிவிற்கு இனிதே வரவேற்கிறேன் ....

- கோபு நடராசன்

Tuesday, October 17, 2006